சில நாட்களுக்கு முன் AIDS விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது நியாபகம் இருக்கலாம். அன்று பல வானொலி நிலையங்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றை ஒலிபரப்பு செய்தன. சாதாரணமாக வானொலியை ரசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது வந்த ஒரு நிகழ்ச்சி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அது என்னை மட்டுமல்ல, நிகழ்ச்சியை கேட்கும் ஒவ்வொரு தமிழனையும் அதிர்ச்சி ஆக்கியிருக்கும்.
தமிழ் மீது அளவற்ற அன்புகொண்ட[:-)] ஒரு வானொலி RJ(Radio Jockey) அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சி என்னவெனில், "AWARENESS" என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தையை தொலைபேசியில் அவருக்கு அழைத்துத் தெரிவிக்க வேண்டும். இதுதான் போட்டி. சரியான பதில் சொல்பவர்களுக்கு பரிசுகளும் அறிவித்திருந்தனர். தலையில் அடித்து அமர்ந்திருந்த எனக்கு இன்னொரு அதிர்ச்சி.
ஒரு நேயர் அவரைத் தொடர்பு கொண்டார். இந்த கேள்வியை திரும்பக் கேட்ட உடன், அந்த நேயர் நீண்ட நேரம் யோசித்து மிக அழகாக "விழிப்புணர்வு" என்று பதில் சொல்லியும்விட்டார். (தமிழில் முனைவர் பட்டம் பெற்றிருப்பார் போலும்). சிறிது நாட்களில் "MOTHER" என்ற ஆங்கில வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தை என்ன என்றுகூட நிகழ்ச்சிகள் வரலாம். யார் கண்டது??
தமிழ் இனி மெல்லச் சாகும் என்று யாரோ சொன்னது நினைவுக்கு வந்தது.
Tuesday, December 18, 2007
Tuesday, December 4, 2007
வாழ்க்கை சக்கரம்

"ஐய்யோ! என்னங்க, குழந்தைக்கு ஜுரம் ஜாஸ்தியாகிட்டே போகுது. சீக்கிரம் போய் டாக்டர் குடுத்த மருந்த வாங்கிட்டு வாங்க போங்க", என்று அழுது கொண்டே ரவியை விரட்டினாள் அவன் மனைவி. மூன்று நாட்கள் ஆகிவிட்டது வேலைக்கு போய். குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு அலைந்ததால் 3 நாளாக வேலைக்கு செல்ல முடியவில்லை. தினக் கூலி கொண்டு வந்தால் தான் அவன் வீட்டில் அடுத்த நாள் அடுப்பெரியும். இதில் மருந்து வாங்க காசு ஏது? இருந்த காசை எல்லாம் குடுத்து டாக்டரை கூட்டி வந்து பார்த்தாயிற்று, இனி மருந்துக்கு எங்கே போவது? யோசித்துக் கொண்டே ரவி குடிசையை விட்டு வெளியே வந்தான். சட்டைப்பையில் இரண்டு ரூபாய் சில்லறை மட்டும்தான் இருந்தது. இதைத்தான் "மருந்துக்குக் கூட காசு இல்லை" என்று சொல்வார்களோ!
சட்டென்று அவனுக்கு தன்னுடன் வேலை செய்யும் நண்பன் மாரியின் நியாபகம் வந்தது. அவன் இந்நேரம் மில்லில் வேலை செய்து கொண்டிருப்பான். போய் கேட்டால் ஏதாவது உதவி செய்வான். நம்பிக்கையோடு நடந்து போய் ஒரு பஸ்சில் ஏறினான். மாலை நேரம் என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. கையில் இருந்த இரண்டு ரூபாயில் "ஒரு பிருந்தாவன் மில்" என்று கேட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டான். கூட்ட நெரிசலில் ரவி பஸ்சின் உள்ளே தள்ளப்பட்டான். "ச்சே! என்ன கூட்டம்பா!" என்று முனுமுனுத்துக் கொண்டே ஒரு பெரியவர் ரவியின் முன் தள்ளிக் கொண்டு வந்தார். டிக்கெட் வாங்க தனது ஜிப்பாவின் வலது பாக்கெட்டில் கைவிட்டு சில்லறை எடுத்தார். எடுக்கும் பொழுது தவறி விழுந்த அவரது மணி பர்சை பாவம் அந்த பெரியவர் கவனிக்கத் தவறிவிட்டார். இதை கவனித்த ரவி குனிந்து அந்த பர்சைக் கையில் எடுத்தான். "பெரியவரே உங்க பர்ஸ்!" என்று சொல்ல எத்தனிபதற்குள் அவர் கூட்டத்தில் சிக்கி முன்னே சென்றுவிட்டார். ரவி அந்தப் பெரியவரைத் தேடினான். கிடைக்கவில்லை. "பிருந்தாவன் மில் எறங்கு" கண்டெக்டரின் சத்தம் ரவியை எட்டியது. ரவி பெரியவரை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான். "யோவ், இன்னும் என்னைய பண்ணிடிருக்க பஸ்குள்ள?" என்று கண்டெக்டர் திட்ட, வேறு வழியில்லாமல் ரவி கீழே இறங்கினான். முன் பக்கம் ஓடிச் சென்று பெரியவர் இருக்காரா என்று பார்த்தான். காணவில்லை. பஸ் வேகமாக புறப்பட்டு சென்றது.
கையில் பர்சுடன் மில் வாசலில் நின்றுகொண்டிருக்கிறான் ரவி. பர்ஸையும் பஸ்ஸையும் மாறி மாறிப் பார்த்தான். பஸ் கண்ணில் இருந்து மறைந்து விட்டது. கனமான அந்த பர்ஸை திறந்து பார்த்தான் ரவி. உள்ளே நிறைய சாமி படங்களுடன் மூன்று 100 ரூபாய் தாள்கள் இருந்தது. கையில் காலணா இல்லாத அந்த நேரத்தில், அந்த 100 ரூபாய்த் தாள்கள் அவனுக்குக் கடவுளைப் பார்த்தமாதிரி இருந்தது. அந்தப் பெரியவரைத் தேடிப்போய் பர்ஸை கொடுத்துவர அவனுக்கு நேரமும் இல்லை, மனமும் இல்லை. தேவைப் படும் நேரத்தில் ஆண்டவனாய்க் கொடுத்தது போல் இருந்தது அவனுக்கு. "நானாகத் திருடவில்லை, அதுவாகத்தான் கிடைத்தது" என்று கொஞ்ச நஞ்சமிருந்த குற்ற உணர்ச்சியைக் கொன்று போட்டான். திடீரென்று ஏதோ நினைத்தவன், அருகிலுருந்த மருந்துக் கடையை நோக்கி ஓடினான்.
அவனை இறக்கி விட்டு சென்ற அந்த பேருந்து வெகு தூரம் சென்ற பின் பாதி வழியில் நின்றது. உள்ளே ஒரு பெரியவர் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். "ஐயோ! என் பர்ஸை காணலியே. எந்தப் படுபாவி எடுத்தானோ. என் மகளுக்கு ஒடம்பு சரியில்லைனு மருந்து வாங்கப் போய்ட்டிருக்கேன், இப்ப போய் இப்படி ஆயிடிச்சே நான் என பண்ணுவேன். என் மகள் ஆஸ்பத்திரியில படுத்து கிடக்கறா. இப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்".
சட்டென்று அவனுக்கு தன்னுடன் வேலை செய்யும் நண்பன் மாரியின் நியாபகம் வந்தது. அவன் இந்நேரம் மில்லில் வேலை செய்து கொண்டிருப்பான். போய் கேட்டால் ஏதாவது உதவி செய்வான். நம்பிக்கையோடு நடந்து போய் ஒரு பஸ்சில் ஏறினான். மாலை நேரம் என்பதால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. கையில் இருந்த இரண்டு ரூபாயில் "ஒரு பிருந்தாவன் மில்" என்று கேட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டான். கூட்ட நெரிசலில் ரவி பஸ்சின் உள்ளே தள்ளப்பட்டான். "ச்சே! என்ன கூட்டம்பா!" என்று முனுமுனுத்துக் கொண்டே ஒரு பெரியவர் ரவியின் முன் தள்ளிக் கொண்டு வந்தார். டிக்கெட் வாங்க தனது ஜிப்பாவின் வலது பாக்கெட்டில் கைவிட்டு சில்லறை எடுத்தார். எடுக்கும் பொழுது தவறி விழுந்த அவரது மணி பர்சை பாவம் அந்த பெரியவர் கவனிக்கத் தவறிவிட்டார். இதை கவனித்த ரவி குனிந்து அந்த பர்சைக் கையில் எடுத்தான். "பெரியவரே உங்க பர்ஸ்!" என்று சொல்ல எத்தனிபதற்குள் அவர் கூட்டத்தில் சிக்கி முன்னே சென்றுவிட்டார். ரவி அந்தப் பெரியவரைத் தேடினான். கிடைக்கவில்லை. "பிருந்தாவன் மில் எறங்கு" கண்டெக்டரின் சத்தம் ரவியை எட்டியது. ரவி பெரியவரை இன்னும் தேடிக் கொண்டிருக்கிறான். "யோவ், இன்னும் என்னைய பண்ணிடிருக்க பஸ்குள்ள?" என்று கண்டெக்டர் திட்ட, வேறு வழியில்லாமல் ரவி கீழே இறங்கினான். முன் பக்கம் ஓடிச் சென்று பெரியவர் இருக்காரா என்று பார்த்தான். காணவில்லை. பஸ் வேகமாக புறப்பட்டு சென்றது.
கையில் பர்சுடன் மில் வாசலில் நின்றுகொண்டிருக்கிறான் ரவி. பர்ஸையும் பஸ்ஸையும் மாறி மாறிப் பார்த்தான். பஸ் கண்ணில் இருந்து மறைந்து விட்டது. கனமான அந்த பர்ஸை திறந்து பார்த்தான் ரவி. உள்ளே நிறைய சாமி படங்களுடன் மூன்று 100 ரூபாய் தாள்கள் இருந்தது. கையில் காலணா இல்லாத அந்த நேரத்தில், அந்த 100 ரூபாய்த் தாள்கள் அவனுக்குக் கடவுளைப் பார்த்தமாதிரி இருந்தது. அந்தப் பெரியவரைத் தேடிப்போய் பர்ஸை கொடுத்துவர அவனுக்கு நேரமும் இல்லை, மனமும் இல்லை. தேவைப் படும் நேரத்தில் ஆண்டவனாய்க் கொடுத்தது போல் இருந்தது அவனுக்கு. "நானாகத் திருடவில்லை, அதுவாகத்தான் கிடைத்தது" என்று கொஞ்ச நஞ்சமிருந்த குற்ற உணர்ச்சியைக் கொன்று போட்டான். திடீரென்று ஏதோ நினைத்தவன், அருகிலுருந்த மருந்துக் கடையை நோக்கி ஓடினான்.
அவனை இறக்கி விட்டு சென்ற அந்த பேருந்து வெகு தூரம் சென்ற பின் பாதி வழியில் நின்றது. உள்ளே ஒரு பெரியவர் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார். "ஐயோ! என் பர்ஸை காணலியே. எந்தப் படுபாவி எடுத்தானோ. என் மகளுக்கு ஒடம்பு சரியில்லைனு மருந்து வாங்கப் போய்ட்டிருக்கேன், இப்ப போய் இப்படி ஆயிடிச்சே நான் என பண்ணுவேன். என் மகள் ஆஸ்பத்திரியில படுத்து கிடக்கறா. இப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்".
Monday, December 3, 2007
காலம் வந்துவிட்டது

"டேய் எந்திரி டா, மணி ஏழு ஆகுது இன்னும் என்ன தூக்கம். காலேஜ்க்கு போற மாறி நினைப்பு இல்லையா?" கையில் காபி தம்ளருடன் அம்மா. "ஏழு மணி வரைக்கும் தூங்கறான் பாரு. இவனெல்லாம் எங்க உருப்படபோறானோ தெரியல" என்ற அப்பாவின் புலம்பல். இதுதான் தினம்தினம் நான் வீட்டில் கேட்கும் காலை வணக்கம். "பையன புடிச்சு திட்டறதே உங்களுக்கு வேலையா போச்சு" என்று அம்மா வின் பதில், கொண்டுவந்த காபியைப் போலவே இனித்தது. "ஆமா! உன் அழகு மகன மடியில போட்டு கொஞ்சு!" என்று அப்பா சொல்ல, "ஏன் என் பையன நான் கொஞ்சாம வேறயாரு வந்து கொஞ்சுவாங்க?" என்று சொல்லிக்கொண்டே மடியில் படுக்கவைத்து தலையை வருடிக்கொடுக்கும் சுகம். அப்பப்பா. எத்தனை பொன் தேடிக் கொண்டுவந்தாலும் கிடைக்குமா?
யாரோ உதைப்பது போலிருந்ததால் தூக்கம் கலைந்தது. விழித்துப் பார்த்தேன். என் நண்பனின் கால் என் மேல் கிடந்தது. தடவித் தடவி கைப்பேசியை எடுத்து மணி பார்த்தேன். நேரம் சரியாக 8:11. "அய்யயோ, லேட் ஆயிடிச்சு டா. சீக்கிரம் எந்திரி. நேத்தே லேட்டா வந்ததுக்கு TL ஒருமாதிரியா பார்த்தான். இன்னைக்கும் லேட்டா போனா அவ்ளோதான், கண்டிப்பா PM கிட்ட போட்டு குடுத்திருவான்". அவசர அவசரமாய் போய் குளிக்கும்போதுதான் நியாபகத்திற்கு வந்தது, அம்மாவின் மடியும் அப்பாவின் கண்டிப்பும் கனவாய் வந்ததென்று...
யாரோ உதைப்பது போலிருந்ததால் தூக்கம் கலைந்தது. விழித்துப் பார்த்தேன். என் நண்பனின் கால் என் மேல் கிடந்தது. தடவித் தடவி கைப்பேசியை எடுத்து மணி பார்த்தேன். நேரம் சரியாக 8:11. "அய்யயோ, லேட் ஆயிடிச்சு டா. சீக்கிரம் எந்திரி. நேத்தே லேட்டா வந்ததுக்கு TL ஒருமாதிரியா பார்த்தான். இன்னைக்கும் லேட்டா போனா அவ்ளோதான், கண்டிப்பா PM கிட்ட போட்டு குடுத்திருவான்". அவசர அவசரமாய் போய் குளிக்கும்போதுதான் நியாபகத்திற்கு வந்தது, அம்மாவின் மடியும் அப்பாவின் கண்டிப்பும் கனவாய் வந்ததென்று...
Friday, November 30, 2007
என் காத்திருப்பு
பனிரெண்டு மாதக் காத்திருப்பும், பதினெட்டு மாத ஏக்கமுமின்றோடு முடியவேண்டுமென்று முடிவெடுத்தேன்;
இதோ புறப்பட்டுவிட்டேன் கையில் காகிதமும் மனதில் காதலுமாய்.
இரண்டு கட்டு காகிதம், ஒரு மை புட்டியின் தியாகம் இறுதியில் அழகிய காதல் கடிதமாக வடிவெடுத்தது.
இதோ என் தூதுவன் தயாராகிவிட்டான். இவன் கொண்டு செல்வது என் காதல் மட்டுமல்ல, என் காத்திருப்புக் காலங்களின் கண்ணீர்த் துளிகளும்தான்.
இது ஒரு அழகிய காலைப் பொழுது. மூன்று வருடங்களாய் அவளை நான் நின்று ரசிக்கும் அதே கல்லூரி வாசல்.
என் வழக்கமான அறுபது கிலோ எடை இன்று நூற்றுக்கு மேல் சென்றுவிட்டதாய் உணர்கிறேன்.
காரணங்கள் இவைதான்: சட்டைப் பையில் கனக்கும் கடிதம், அதை விட முதிர்ந்துவிட்ட என் காதல்.
அதோ வருகிறாள் என் தேவதை. வழக்கம்போல் தோழிகள் புடைசூழ.
கால் கொலுசு ஓசையும் மல்லிகை மணமும் ஓட்டப் போட்டி நடத்திவர, அதனிடையே அவளும், இதோ வந்துவிட்டாள்.
இன்றும் அதே புன்முறுவல் எப்பொழுதும்போல, ஆனால் என்னைப் பார்த்து அல்ல.
கையில் கடிதம் மனதில் காதல்; இன்று கண்டிப்பாக கொடுத்து விடுவது என்ற மன திடம்.
இன்றாவது வெற்றிகொள்வேனா?பார்க்கலாம்.
இதோ நெருங்கிவிட்டாள்.
நான் இப்பொழுது 'நீ'ராயுதபானியாய் நின்றுகொண்டிருக்கிறேன்உடல் முழுதும் வழிந்தோடும் உப்புக் காவிரியால்.
நேற்று அவளிடம் பெற்ற புத்தகத்தில் வைத்துக் கொடுத்து விடலாமென்று என் உள்மனம் உரைத்தது,சரியென்று சொல்லி அழைத்தேன் அவளை.
"என்னவளே" என்று ஆரம்பித்த உதடுகள், "என்னங்க" என்று முடிந்தது.
அவள் என்னிடம் வந்தாள்.
'உங்கள் புத்தகம் இதோ' ,என்றேன்
நான் சொல்லவேண்டிய நன்றியை அவள் சொல்லிச் சென்றாள்.
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், நீ வென்றுவிட்டாய் என்று உள் மனம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.
இரண்டு ஆண்டுக் காத்திருப்புப் பயணம் இன்று ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது ; நாளை என்ன பதில் வருமோ என்ற தவிப்பு தொடங்கியது. வெற்றிக் களிப்பில் வழிந்தோடிய வியர்வையை துடைக்க கைக்குட்டை தேடினேன்,சிக்கியதோ ஒரு காகிதம், என்னவென்று பார்த்தேன்.'அன்புள்ள' என்று ஆரம்பித்து 'காதலுடன் காத்திருக்கும்' என் கையெழுத்து என்னை எக்காளமிட்டது. அந்தப் புத்தகத்தில் என்னதான் வைத்துக் கொடுத்தேன்?
"உங்கள் கைக்குட்டை" என்று கொண்டுவந்து கொடுத்துச் சென்றாள் அவள்.
சிரித்துக் கொண்டே பெற்றுக் கொண்டேன்.வேறென்ன செய்யமுடியும் என்னால்...
இதோ புறப்பட்டுவிட்டேன் கையில் காகிதமும் மனதில் காதலுமாய்.
இரண்டு கட்டு காகிதம், ஒரு மை புட்டியின் தியாகம் இறுதியில் அழகிய காதல் கடிதமாக வடிவெடுத்தது.
இதோ என் தூதுவன் தயாராகிவிட்டான். இவன் கொண்டு செல்வது என் காதல் மட்டுமல்ல, என் காத்திருப்புக் காலங்களின் கண்ணீர்த் துளிகளும்தான்.
இது ஒரு அழகிய காலைப் பொழுது. மூன்று வருடங்களாய் அவளை நான் நின்று ரசிக்கும் அதே கல்லூரி வாசல்.
என் வழக்கமான அறுபது கிலோ எடை இன்று நூற்றுக்கு மேல் சென்றுவிட்டதாய் உணர்கிறேன்.
காரணங்கள் இவைதான்: சட்டைப் பையில் கனக்கும் கடிதம், அதை விட முதிர்ந்துவிட்ட என் காதல்.
அதோ வருகிறாள் என் தேவதை. வழக்கம்போல் தோழிகள் புடைசூழ.
கால் கொலுசு ஓசையும் மல்லிகை மணமும் ஓட்டப் போட்டி நடத்திவர, அதனிடையே அவளும், இதோ வந்துவிட்டாள்.
இன்றும் அதே புன்முறுவல் எப்பொழுதும்போல, ஆனால் என்னைப் பார்த்து அல்ல.
கையில் கடிதம் மனதில் காதல்; இன்று கண்டிப்பாக கொடுத்து விடுவது என்ற மன திடம்.
இன்றாவது வெற்றிகொள்வேனா?பார்க்கலாம்.
இதோ நெருங்கிவிட்டாள்.
நான் இப்பொழுது 'நீ'ராயுதபானியாய் நின்றுகொண்டிருக்கிறேன்உடல் முழுதும் வழிந்தோடும் உப்புக் காவிரியால்.
நேற்று அவளிடம் பெற்ற புத்தகத்தில் வைத்துக் கொடுத்து விடலாமென்று என் உள்மனம் உரைத்தது,சரியென்று சொல்லி அழைத்தேன் அவளை.
"என்னவளே" என்று ஆரம்பித்த உதடுகள், "என்னங்க" என்று முடிந்தது.
அவள் என்னிடம் வந்தாள்.
'உங்கள் புத்தகம் இதோ' ,என்றேன்
நான் சொல்லவேண்டிய நன்றியை அவள் சொல்லிச் சென்றாள்.
வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், நீ வென்றுவிட்டாய் என்று உள் மனம் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.
இரண்டு ஆண்டுக் காத்திருப்புப் பயணம் இன்று ஒரு வழியாய் முடிவுக்கு வந்தது ; நாளை என்ன பதில் வருமோ என்ற தவிப்பு தொடங்கியது. வெற்றிக் களிப்பில் வழிந்தோடிய வியர்வையை துடைக்க கைக்குட்டை தேடினேன்,சிக்கியதோ ஒரு காகிதம், என்னவென்று பார்த்தேன்.'அன்புள்ள' என்று ஆரம்பித்து 'காதலுடன் காத்திருக்கும்' என் கையெழுத்து என்னை எக்காளமிட்டது. அந்தப் புத்தகத்தில் என்னதான் வைத்துக் கொடுத்தேன்?
"உங்கள் கைக்குட்டை" என்று கொண்டுவந்து கொடுத்துச் சென்றாள் அவள்.
சிரித்துக் கொண்டே பெற்றுக் கொண்டேன்.வேறென்ன செய்யமுடியும் என்னால்...
Subscribe to:
Comments (Atom)